ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

புதன், 15 ஆகஸ்ட், 2012

ரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாகாத மனிதன் யார்? அடிமையாக இருக்கும் மனிதன் யார்?

[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2கடிதம் 3கடிதம் 4கடிதம் 5கடிதம் 6கடிதம் 7கடிதம் 8 , கடிதம் 9, கடிதம் 10, கடிதம் 11, கடிதம் 12கடிதம் 13கடிதம் 14கடிதம் 15கடிதம் 16, கடிதம் 17கடிதம் 18, கடிதம் 19கடிதம் 20, கடிதம் 21கடிதம் 22கடிதம் 23, கடிதம் 24, கடிதம் 25 ]

அன்புள்ள தம்பிக்கு,

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

இன்று ஆகஸ்ட் 15, அதாவது இந்தியாவிற்கு சுதந்திரம்  கிடைத்த நாள். கடந்த 66 ஆண்டுகளாக நாம் சுதந்திர காற்றை சுவாசித்துக்கொண்டு இருக்கிறோம்.  சுதந்திரத்தின் விலை என்னவென்று உனக்குத் தெரியுமா? குறைந்தபட்சம் சுதந்திரத்தின் முக்கியத்துவம் எவ்வளவு பெரியது என்று உனக்குத் தெரியுமா தம்பி.

நான் மேலை நாட்டு மக்களை பார்க்கும் போது, அவர்கள் அளவுக்கு அதிகமாக சுதந்திரத்தை அனுபவிப்பவர்களாக காண்கிறேன். அதே நேரத்தில் இஸ்லாமியர்களை காணும் போது, "சுதந்திரத்தின் வாசனையை கூட இவர்கள் சுவாசிக்காதவர்கள்" என்று எண்ணத்தோன்றுகிறது. அதாவது முஸ்லிம்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் சரி, அவர்கள் இன்னும் அடிமைகளாகவே இருப்பதாக காண்கிறேன்.  மேலை நாட்டவர்கள் சுதந்திரத்தை அளவுக்கு அதிகமாக தவறாக பயன்படுத்துகின்றனர். ஆனால், இஸ்லாமியர்களுக்கோ, அதன் வாசனையும் இன்னும் காட்டப்படவில்லை. என்னடா அண்ணன் குழப்புகிறானே என்று பார்க்கிறாயா? உனக்கு நான் தெளிவாக விளக்குகிறேன், சுந்திரமாக படித்துக்கொள்.

உனக்கு மூன்று வகையான சுதந்திரம்பற்றி நான் கூறப்போகிறேன். இதில் மூன்றாவதாக சொல்லப்போகும் சுதந்திரம் தான் உன்னை அதிகமாக சிந்திக்கச் செய்யும் என்று நம்புகிறேன்.

1) நாட்டு சுதந்திரம்
2) மத சுதந்திரம்
3) ஆன்மீக சுதந்திரம் (அ) உள்ளான சுதந்திரம்
---------------------------------------------------------------

1) நாட்டு சுதந்திரம்:

முதலாவதாக, நாட்டு சுதந்திரம் பற்றி பார்ப்போம், நம் நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து 1947ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. நம்மை நாமே ஆட்சி செய்துக்கொண்டு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம். சிலர் "அரசியல் வாதிகளிடம் மாட்டிக்கொண்டு இருக்கிறோமே, எங்கே சுதந்திரம் கிடைத்தது" என்று வேதனைப்பட்டுக்கொண்டு இருப்பார்கள், உண்மை தான், ஆனால், மற்ற நாட்டுக்காரனிடமிருந்து விடுதலை கிடைத்ததே, இதுவே மிகப்பெரிய சுதந்திரம். ஆக, இந்தியாவில் வாழும் அனைவருக்கும், மத பாகுபாடு இன்றி நாட்டு சுதந்திரம் கிடைத்துள்ளது.

2) மத சுதந்திரம் (முஸ்லிம் ஒரு அடிமையாவான்):

கிறிஸ்தவனுக்கும், இந்துவிற்கும் மத சுதந்திரம் உண்டு, ஆனால் ஒரு முஸ்லிமுக்கு மத சுதந்திரம் இல்லை. இந்திய மக்கள் எந்த மதத்தையும் பின்பற்றலாம் என்று அரசியல் சாசனம் சொல்கிறது இது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், தனிப்பட்ட முறையில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த முஸ்லிமுக்கு தன் மதத்தை விட்டு வெளியே வந்து தனக்கு பிடித்தமான மார்க்கத்தை பின்பற்ற அனுமதியில்லை. அரசு அனுமதித்தாலும், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், மக்கள் அனுமதிப்பதில்லை.

எனவே, முஸ்லிம் மத சுதந்திரம் கிடைக்காத ஒரு அடிமையாக இருக்கிறான். பேச்சுக்காக அப்படியெல்லம் ஒன்றுமில்லை என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறினாலும், உண்மையில் இஸ்லாமிலிருந்து வெளியே வரும் மக்கள் சந்திக்கும் இன்னல்கள், துன்பங்கள், பயமுறுத்தல்கள், கொலை மிரட்டல்கள் கொஞ்ச மல்ல. இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமை விட்டு வெளியேறியவர்களை கொலை செய்யும் சட்டமும் உண்டு. இதனை அவ்வப்போது செய்தித்தாள்களில் நாம் காணலாம். எனவே, ஒரு முஸ்லீமுக்கு மத சுந்திரம் இல்லை என்பது எழுதப்படாத சட்டமாகும். எனவே, தம்பி, நீயும் ஒரு அடிமை என்பதை மனதில் வைத்துக்கொள். நீ இன்னும் சுதந்திரம் அடையவில்லை என்பதை புரிந்துக்கொள்.

3)  ஆன்மீக சுதந்திரம் (அ) உள்ளான சுதந்திரம்:

தம்பி, உலகத்தில் இருக்கும் இஸ்லாமியர்களை காணும் போது, அவர்கள் ஆன்மீக சுதந்திரம் அல்லது உள்ளான சுதந்திரம் அடையாமல் இருப்பதை காணமுடிகிறது. அது என்ன உள்ளான சுதந்திரம் என்று கேட்கிறாயா? மேற்கொண்டு படி உனக்கு புரியும்

3.1) இஸ்லாமை விமர்சிப்பவனை கொலை செய்ய துடிக்கும் அடிமைத்தனம்:

இன்று உலக அளவில் நாம் காணும் போது, எந்த நாட்டிலாவது யாராவது இஸ்லாமை விமர்சித்து விட்டால்  உடனே உலக இஸ்லாமியர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள். தங்கள் மார்க்கம் பற்றி விமர்சித்தால் அதற்கு அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிப்பது தவறானது அல்ல. ஆனால், அப்படி எதிர்ப்பு தெரிவிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், "விமர்சிப்பவர்கள் சாகவேண்டும்" என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். ஆக எந்த ஒரு முஸ்லிமானவது "தன் மார்க்கத்தை விமர்சிப்பவன் சாகவேண்டும்" என்று குரோதம் கொண்டு சொல்கிறானோ, அவன் இன்னும் அடிமைத் தனத்தில் இருப்பவன் என்று அர்த்தமாகும். அதாவது அவன் இன்னும் உள்ளான சுதந்திரம் அடையவில்லை, அல்லது ஆன்மீக சுதந்திரம் அடையவில்லை.  அவன் குரோதம் அல்லது மதவெறி என்ற பாவத்தில் அல்லது அடிமைத் தனத்தில் சிக்கியுள்ளான். அவன் இன்னும் விடுதலை அடையவில்லை.

3.2) வெறுப்புணர்ச்சி, குரோதம், பழிவாங்க வேண்டும் என்ற அடிமைத் தனம்:

ஒரு மனிதன் தன் மார்க்கத்தை காரணமில்லாமல் விமர்சிக்கும் போது, அவனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி, அவன் மன்னிப்பு கேட்கும் படி செய்துவிட்டு கடந்துச் சென்றுவிட்டால், ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால், முஸ்லிம்களின் நிலை இந்த வகையில் இருப்பதில்லை. அவர்கள் பழி வாங்க துடிக்கிறார்கள், விமர்சித்தவன் சாகவேண்டும் என்று வெளிப்படையாக பானர்கள் எழுதி உலகிற்கு தங்கள் வெறுப்பை காட்டிக்கொள்கிறார்கள். இது நமக்கு எதைக் காட்டுகிறது?  அவர்கள் இன்னும்  "வெறுப்புணர்ச்சி, குரோதம், பழிவாங்க வேண்டும் என்ற துடிப்பு" போன்றவைகளுக்கு இன்னும் அடிமையாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

ஆனால், இதே இஸ்லாமியர்கள் சொற்பொழிவு ஆற்றும் போது பார்த்தால், வெறுப்புணர்ச்சி, குரோதம், மற்றும்  பழிவாங்குதல் என்பது சாத்தானின் செயல்களாகும், இவைகளை நாம் செய்யக்கூடாது என்றுச் சொல்வார்கள், எழுதுவார்கள். ஆனால், உண்மையில் தங்கள் மார்க்கத்தை யாராவது விமர்சித்தால், இவர்கள் தங்கள் சொல்லுக்கு நேர் எதிராக காணப்படுவார்கள். ஏன் இப்படி நடந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று நாம் கவனித்தால், அவர்கள் இன்னும் விடுதலை அடையவில்லை அதாவது அவர்களின் உள்ளான மனுஷன் இன்னும் விடுதலை அடையவில்லை என்பது தெளிவாக புரியும். அவர்கள் இன்னும் புதிய மனுஷனாக மாறவில்லை, புதிய சிருஷ்டியாக மாறவில்லை என்பது புலனாகும்.

3.3) கிறிஸ்தவர்களின் உள்ளான மனுஷனின் விடுதலை:

இஸ்லாமியர்களுக்கு நடப்பது போல, கிறிஸ்தவர்களுக்கும் நடக்கிறது, அதாவது கிறிஸ்தவத்தை அனேகர் விமர்சிக்கின்றனர், புத்தகம் எழுதுகின்றனர், மேடைகளில் பேசுகின்றனர், மட்டுமல்ல படங்களும் எடுக்கின்றனர். ஆனால், கிறிஸ்தவ உலகம் இதனை எப்படி எதிர்க்கொள்கிறது?

அ) உலக கிறிஸ்தவ மக்கள், தங்கள் எதிர்ப்பை ஆய்வுக் கட்டுரைகளாக எழுதி செய்தித்தாள்களில் மறுப்பு எழுதுகின்றனர். விமர்சிப்பவர்களின் அறியாமையை உலகிற்கு எடுத்துக்காட்டி அவர்களின் வாயை அமைதியான முறையில் அடைக்கின்றனர்.

ஆ) மறுப்பு புத்தகங்களாக எழுதி வெளியிடுகின்றனர்.

இ) தங்கள் எதிர்ப்பை ஊர்வலமாக வந்து வெளிப்படுத்துகின்றனர்.

ஈ) இன்னும் ஒரு படி மேலே சென்று, விமர்சிப்பவரோடு விவாதம் புரிந்து, உண்மையை உலகிற்கு காட்டுகின்றனர்.

ஆனால், எந்த காரணத்தைக் கொண்டும், "கிறிஸ்தவத்தை விமர்சிப்பவர், கொலை செய்யப்படவேண்டும், சாகவேண்டும், கொடுமைப் படுத்தப்படவேண்டும்" என்று கிறிஸ்தவர்கள் சொல்வதில்லை, ஏனென்றால் கிறிஸ்தவர்கள் உள்ளான விடுதலை உடையவர்கள், அதாவது அவர்கள் "வெறுப்புணர்ச்சி, குரோதம், பழிவாங்கும் எண்ணம்" என்ற தீய குணங்களை வென்றவர்கள்.

• தாங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் இயேசுவை விமர்சிப்பவன் சாகவேண்டும் என்று விரும்பமாட்டார்கள்.

• தங்கள் பைபிளை விமர்சிப்பவன் சாகவேண்டும் என்று பெரிய பலகைகளில் எழுதிக்கொண்டு, அவைகளை காட்டிக்கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கமாட்டார்கள்.

• இயேசுவின் சீடர்கள் பற்றி தப்பு தப்பாக விமர்சிப்பவர்கள், கேலி செய்பவர்கள் கொலை செய்யப்படவேண்டும் என்று எந்த ஒரு கிறிஸ்தவனும் பத்வா (சட்டம்) கொடுக்கமாட்டான்.

• 1999ம் ஆண்டு தன் வாகனத்தில் தூங்கிக்கொண்டு இருந்த கிரஹாம் ஸ்டுவர்ட் ஸ்டேயின்ஸ் என்ற மிஷனரியையும், அவரது இரண்டு மகன்களையும் இந்துத்துவ நண்பர்கள் தீ வைத்து கொளுத்திவிட்டனர். இந்த கிறிஸ்தவ ஊழியரின் மனைவி கிளாடி ஸ்டெயின்ஸ், தன் கணவரையும், பிள்ளைகள் இருவரையும் கொன்றவர்களை மன்னித்துவிட்டதாக அறிவித்தார். இப்படிப்பட்ட மன்னிக்கும் குணம் எப்படி இவருக்கு வந்தது? இதற்கு பதில், "அவர் உண்மையாகவே விடுதலை அடைந்தவராக இருப்பதினால், இவ்வித செயலில் ஈடுபட்டவர்களையும் மன்னித்துவிட்டார்".

கிறிஸ்தவன் முழுவதுமாக விடுதலை அடைந்தவன், ஆனால், ஒரு முஸ்லிம் இன்னும் அடிமைத் தனத்தில் இருப்பவன், எனவே தான் இஸ்லாமை விமர்சிப்பவர்கள் சாகவேண்டும் என்று பத்வா கொடுத்துக்கொண்டும், சபித்துக்கொண்டும் இருக்கின்றான்.

தம்பி, நீ விடுதலை அடைந்துள்ளாயா? அதாவது உன்னுடைய உள்ளான மனுஷன் விடுதலை அடைந்துள்ளானா? இதனை எப்படி நான் அறிவேன் என்று நீ என்னிடம் கேட்கலாம். அதற்கு பதில் இது தான், அதாவது யாராவது குர்-ஆனை எரித்துவிட்டார் என்றும், முஹம்மது பற்றி கேலியாக பேசிவிட்டார் என்றும் நீ கேள்விப்படும் போது உன் மனதில் அப்போது தோன்றும் எண்ணம் எவ்வாக இருக்கிறது?  "இப்படிப்பட்ட செயலைச் செய்தவன் சாகவேண்டும்" என்று உன் உள்ளம் சொல்கிறதா? அல்லது "அவன் மன்னிப்பு கேட்டால் போதும் என்று சொல்கிறதா?". அவன் சாகத்தான் வேண்டும் என்று உன் உள்ளம் சொன்னால், "நீ இன்னும் விடுதலை அடையவில்லை என்று அர்த்தம், சாத்தானுடைய குணம் உன்னில் காணப்படுகிறது என்று அர்த்தம், இறைவனின் குணமாகிய மன்னிக்கும் சுபாவம் உன்னிடம் இல்லை என்று அர்த்தம், மொத்தத்தில் நீ பாவத்திற்கு அடிமை என்று அர்த்தம்".

ஆனால், இதே நிலை கிறிஸ்தவனுக்கு நேர்ந்தால், அவன் உள்ளமும் துடிக்கும், துக்கம் அடையும், இஸ்லாமியர்களுக்கு செய்வது போலவே சாத்தான் அவன் உள்ளத்தில் அப்படிப்பட்டவனை சபிக்கச் சொல்லுவான், சாகவேண்டும் என்று சொல்லச்சொல்லுவான். ஆனால், வேதத்தை அந்த கிறிஸ்தவன் படிப்பதினாலும், பரிசுத்த ஆவியானவர் அவன் உள்ளத்தில் இருப்பதினாலும், கிறிஸ்துவின் அன்பு அவன் உள்ளத்தில் ஊற்றப்பட்டு இருப்பதினாலும், அவன் எல்லா தீய எண்ணங்களை ஜெயித்து, விமர்சிப்பவன் மனந்திரும்ப வேண்டும் என்று ஜெபிப்பான், நிச்சயமாக அவன் சாகவேண்டும் என்று கருதமாட்டான்.

உங்கள் எதிர்களை நேசியுங்கள், அவர்களுக்காக ஜெபியுங்கள் என்ற வார்த்தைகள் அவன் உள்ளத்தில் பதிந்து இருப்பதினால், அவன் ஜெபத்தில் தன் உள்ள குமுறல்களை கொட்டிவிட்டு, மன நிம்மதி அடைவான், கடைசியாக, யுத்தம் கர்த்தருடையது, நாம் ஒன்றும் செய்யக்கூடாது என்பதை நினைத்து, அவனை மன்னித்துவிடுவான். இப்படியெல்லாம் ஏன் கிறிஸ்தவன் செய்கிறான் என்று பார்த்தால், அவன் ஒரு புதிய மனிதனாக இருக்கிறான், புதிய சிருஷ்டியாக இருக்கிறான், அவனது உள்ளான மனுஷன் விடுதலையாகி இருப்பதினால் கிறிஸ்தவன் எல்லாவற்றையும் தேவனது சந்நிதியில் சொல்லிவிட்டு, விடுதலையோடு வாழுகின்றான்.

இந்த விடுதலை ஒரு முஸ்லிமுக்கு கிடைப்பதில்லை, எனவே தன் வேதனையை கோபமாக குரோதமாக வெளிக்காட்டி, பழிவாங்க துடிக்கிறான்.

தம்பி, இப்போது எனக்குச் சொல், நீ இந்த மேற்கண்ட சூழ்நிலையில் அகப்படும் போது என்ன நினைக்கிறாய்? பழிவாங்க துடிக்கிறாயா? விமர்சிப்பவன் சாகவேண்டும் என்று துடிக்கிறாயா? அல்லது மன்னித்து விடுகிறாயா? வெறும் வார்த்தைகளில் "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்றுச் சொல்வதல்ல, அதனை செயலில் காட்ட முஸ்லிம்களுக்கு பொறுமையுள்ளதா? இந்த பொறுமையை குர்-ஆன் கற்றுக்கொடுத்துள்ளதா? முஹம்மது கற்றுக்கொடுத்துள்ளாரா?" முஸ்லிம்கள் சிந்திக்கவேண்டும்.

தம்பி இதோடு நான் முடிக்கிறேன், குமாரன் உன்னை விடுதலையாக்கினால் நீ உண்மையாகவே விடுதலை ஆவாய். கர்த்தருடைய ஆவி எங்கே இருக்குமோ, அங்கே விடுதலை இருக்கும். நீ  சத்தியத்தை அறியும் போது, அந்த சத்தியம் உன்னை விடுதலையாக்கும்.

தம்பி, நான் விடுதலையோடு இருக்கிறேன், நீ விடுதலையோடு இருக்கிறாயா? உன் உள்ளான மனுஷன் விடுதலையோடு இருக்கின்றானா? உன் இஸ்லாமிய நண்பர்கள் விடுதலையோடு இருக்கிறார்களா?
இந்திய சுதந்திர நாளாகிய இன்று, நீ உள்ளான மனுஷனில் விடுதலை அடைய நான் வேண்டிக்கொள்கிறேன்.

விடுதலை நாயகன் இயேசுக் கிறிஸ்து உனக்கு விடுதலையை அளிப்பாராக.

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்,

இப்படிக்கு, உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்.

கருத்துகள் இல்லை: